News March 10, 2025
கம்பீர் நிம்மதி அடைந்திருப்பார்: அஸ்வின்

CT கோப்பையை இந்திய அணி வென்றதற்கு பாராட்டு குவிந்து வருகிறது. முன்னாள் வீரர் அஸ்வின், தனது X தளத்தில், ரோஹித் படைக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டு, கம்பீர் நிம்மதி அடைந்திருப்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் கம்பீர் BGT தொடரில் ஏற்பட்ட தோல்வியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒருவேளை CT கோப்பையையும் தவற விட்டிருந்தால், அவரின் பதவிக்கே அது சிக்கலாகவே மாறியிருக்கும்.
Similar News
News March 10, 2025
உலகின் இரண்டாவது பெரிய முட்டை இதுதான்

அண்டார்டிகாவில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முட்டை எந்த விலங்கினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. கோழி முட்டை போல வலுவான ஓடு இல்லாமல் இந்த முட்டையின் ஓடு மிருதுவானதாக இருக்கிறது. ஆகையால், இது கடல் பிராணியான மொசாசர்ஸ் விலங்கினுடையதாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானைப் பறவையின் முட்டைக்குப் பிறகு இதுதான் உலகின் பெரிய முட்டை என்றும் கூறப்பட்டுள்ளது.
News March 10, 2025
வீடு தேடி வரும் ₹5000 .. யார் யாருக்கு தெரியுமா?

மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு அடல் பென்சன் யோஜனாவை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதந்தோறும் ₹5000 ஓய்வூதியம் பெறலாம். ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் (18 – 40 வயதுக்குள்) இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தினம் ₹7 வீதம் மாதம் ₹210 முதலீடு செய்தால், 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக ₹5000 வீடு தேடி வரும்.
News March 10, 2025
ஹிந்துக்களுக்கு தனி மட்டன் கடைகள்

மஹாராஷ்டிராவில் ஹிந்துக்களுக்கென ஹிந்துக்களால் நடத்தப்படும் பிரத்யேக ஜத்கா இறைச்சி கடைகள் செயல்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் நிதேஷ் ராணே அறிவித்துள்ளார். இதற்கென ‘Malhar’ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹலால் முறைக்கு மாற்றாக இந்த ஜத்கா முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஹிந்து மரபு படி, விலங்குகள் வலியில் துடிக்காமல் ஒரே அடியில் பலியிடப்பட்டு ஜத்கா இறைச்சி தயாரிக்கப்படுகிறது.