News March 10, 2025
பாமக நிதிநிலை அறிக்கை: ₹318க்கு சிலிண்டர்

சமையல் எரிவாயு ₹318க்கு (₹500 மானியம்) வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. * ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ₹1000இல் இருந்து ₹2000ஆக உயர்த்தப்படும். *முதியோர்/ ஆதரவற்றோர் உதவித்தொகை ₹3000ஆக உயர்த்தப்படும். *வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹5000 வழங்கப்படும். *மின் கட்டணம் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2025
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு .. பாமக

பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை *அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை * உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு * தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். திருநங்கையருக்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2025
உலகின் இரண்டாவது பெரிய முட்டை இதுதான்

அண்டார்டிகாவில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முட்டை எந்த விலங்கினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. கோழி முட்டை போல வலுவான ஓடு இல்லாமல் இந்த முட்டையின் ஓடு மிருதுவானதாக இருக்கிறது. ஆகையால், இது கடல் பிராணியான மொசாசர்ஸ் விலங்கினுடையதாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானைப் பறவையின் முட்டைக்குப் பிறகு இதுதான் உலகின் பெரிய முட்டை என்றும் கூறப்பட்டுள்ளது.
News March 10, 2025
வீடு தேடி வரும் ₹5000 .. யார் யாருக்கு தெரியுமா?

மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு அடல் பென்சன் யோஜனாவை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதந்தோறும் ₹5000 ஓய்வூதியம் பெறலாம். ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் (18 – 40 வயதுக்குள்) இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தினம் ₹7 வீதம் மாதம் ₹210 முதலீடு செய்தால், 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக ₹5000 வீடு தேடி வரும்.