News March 10, 2025

பார்லி. வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்

image

மத்திய அமைச்சர் பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். PM SHRI திட்டத்தில் முதலில் கையெழுத்திட முன்வந்த TN CM, பின்னர் யூடர்ன் அடித்துவிட்டதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். யாரோ ஒரு சூப்பர் முதல்வர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

Similar News

News March 10, 2025

வீடு தேடி வரும் ₹5000 .. யார் யாருக்கு தெரியுமா?

image

மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு அடல் பென்சன் யோஜனாவை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதந்தோறும் ₹5000 ஓய்வூதியம் பெறலாம். ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் (18 – 40 வயதுக்குள்) இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தினம் ₹7 வீதம் மாதம் ₹210 முதலீடு செய்தால், 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக ₹5000 வீடு தேடி வரும்.

News March 10, 2025

ஹிந்துக்களுக்கு தனி மட்டன் கடைகள்

image

மஹாராஷ்டிராவில் ஹிந்துக்களுக்கென ஹிந்துக்களால் நடத்தப்படும் பிரத்யேக ஜத்கா இறைச்சி கடைகள் செயல்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் நிதேஷ் ராணே அறிவித்துள்ளார். இதற்கென ‘Malhar’ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹலால் முறைக்கு மாற்றாக இந்த ஜத்கா முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஹிந்து மரபு படி, விலங்குகள் வலியில் துடிக்காமல் ஒரே அடியில் பலியிடப்பட்டு ஜத்கா இறைச்சி தயாரிக்கப்படுகிறது.

News March 10, 2025

ஆயுத இறக்குமதி.. உலகிலேயே இந்தியா 2ஆவது இடம்

image

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா (8.3%) 2ஆவது இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது. முதலிடத்தில் உக்ரைன் (8.8%), 3-5 இடங்களில் கத்தார், சவூதி அரேபியா, பாகிஸ்தான் இருப்பதாக SIPRI கூறியுள்ளது. ஆயுதங்களுக்கு ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்த நிலை மாறி, USA, பிரான்ஸ், இஸ்ரேலிடம் தற்போது இந்தியா அதிக ஆயுதம் வாங்கி உள்ளதாகவும் SIPRI குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!