News March 10, 2025
பாமக நிதிநிலை அறிக்கையில் 158 அறிவிப்புகள்

பாமக வெளியிட்டுள்ள பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் 158 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, *அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் *8வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்கப்படும் *அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு முழு அகவிலைப்படி உயர்வு * தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திர தினம் அல்ல..

*Liechtenstein 1940-ல் ஜெர்மன் குடியரசில் இருந்து பிரிந்ததை National day-வாக கொண்டாடுகிறது.
*வட மற்றும் தென் கொரியா நாடுகள், 1945-ல் ஜப்பானில் இருந்து விடுதலை பெற்றதை, Liberation day-வாக கொண்டாடுகின்றன.
*1960-ல் பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை காங்கோ குடியரசு National day-வாக கொண்டாடுகிறது.
*பஹ்ரைன் 1971-ல் பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் தினமாக கொண்டாடுகிறது.
News August 15, 2025
விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு: CM

விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை ₹22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ₹15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தியாகிகள், போராளிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டதாகவும் சுதந்திர தின உரையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
11 நிமிடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை.. செயலியால் அசத்தல்

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள, பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 11 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அவசரம் 108 செயலியில் உங்களின் இருப்பிடத்தை உறுதிபடுத்தி தகவல் கொடுத்தால், விரைவாக சேவை கிடைக்குமாம். அவசர தேவைக்கு பயன்படுத்திகோங்க..