News March 10, 2025
கிராம நத்தம் நில ஆவணங்கள் ‘ஆன்லைன்’ மயமாகிறது

கிராம நத்தம் நில ஆவணங்களை ஆன்லைன் முறைக்கு மாற்றும் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க, தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் ‘தமிழ் நிலம்’ இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், கிராமங்களில் உள்ள நத்தம் நில ஆவணங்களில் உள்ள பல சிக்கல்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 10, 2025
படத்தையே கொன்றுவிட்டனர்: இயக்குநர் வேதனை

‘சப்தம்’ படத்திற்கு போதிய புரமோஷன் செய்யாமல் கொன்றுவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் அறிவழகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பட ரீலீஸ் தாமதம் என பல குளறுபடிகளை செய்தாலும், ஹவுஸ்ஃபுல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் அன்பையும், ஆதரவையும் பெற்றதாக அவர் கூறியுள்ளார். பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என யாரையும் அவர் நேரடியாக குற்றஞ்சாட்டவில்லை. கடந்த பிப்.28ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
News March 10, 2025
தனுஷ் – நயன்தாரா வழக்கில் அடுத்தது என்ன?

நெட்பிளிக்ஸ்-ல் வெளியான நயன்தாராவின் ஆவணப் படத்தில், நானும் ரவுடி தான் பட காட்சி இடம்பெற்றிருந்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், ரூ.10 கோடி இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நெட்பிளிக்ஸ்-ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தீர்ப்பு யார் பக்கம் வருமோ?
News March 10, 2025
ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.