News March 10, 2025
MP தமிழச்சி தங்கபாண்டியன் சரமாரி கேள்வி

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கான நிதி குறித்து சரமாரியாக கேள்வியெழுப்பினார். மத்திய அரசின் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் எனக் கூறுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது என அவர் குற்றம்சாட்டினார். மேலும், கல்வி நிதியை தமிழகத்திற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News March 10, 2025
‘ரெட்ரோ’ எப்படி இருக்கிறது? – இயக்குநர் நச் பதில்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ரெட்ரோ திரைப்படத்தை மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணாடி பூவே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரெட்ரோ திரைப்படம் நன்றாக உருவாகி இருப்பதாகவும், படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
News March 10, 2025
எதிர்ப்புக்கு பணிந்த தர்மேந்திர பிரதான்!

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி.க்களை ‘நாகரீகமற்றவர்கள்’ என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் எனக் கூறினார். இதையடுத்து, சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால், நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையை தான் திரும்பப் பெறுவதாக தர்மேந்திர பிரதான் கூறினார்.
News March 10, 2025
கன்னியாகுமரி – காஷ்மீருக்கு ரயில்.. ரயில்வே அசத்தல் திட்டம்

தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடி ரயில் கிடையாது. சாலை மார்க்கமோ, விமானம் மூலமாகவோதான் செல்ல முடியும். இந்த குறையை போக்க கன்னியாகுமரி (அ) ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீருக்கு 4,000 கி.மீ. தூரம், அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஏப்ரலில் கட்ரா-பனிஹால் இடையே ரயில் விடப்படவுள்ளது. இது வெற்றிகரமானால், இத்திட்டம் சாத்தியமாகும் என தெற்கு ரயில்வே கருதுகிறது.