News March 10, 2025
குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல், வீரசின்னம்பட்டி பகுதியில் தோட்டத்தில் தொல்லை செய்த குரங்கை, நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, சமைத்துச் சாப்பிட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1000 கொடுத்து குரங்கை கொலை செய்யக் கூறிய தோட்ட உரிமையாளர் ராஜாராம் மற்றும் குரங்கைக் கொன்று சமைத்துச் சாப்பிட்ட ஜெயமணி இருவரையும் சிறுமலை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 5, 2025
திண்டுக்கல்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

திண்டுக்கல்: என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா(20). செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த இவர், நண்பர்களுடன் குளிப்பதற்காக குஜிலியம்பாறை ரோடு தனியார் கல்லூரி அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் இடுப்பில் கயிறுக்கட்டிக்கொண்டு கிணற்றின் ஓரமாக அமர்ந்து குளித்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அவிழ்ந்ததில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 5, 2025
திண்டுக்கல்: தேர்வின்றி அரசு வேலை! உடனே APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்ப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ஆம் தேதிக்குள், https://startuptn.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 5, 2025
திண்டுக்கல்லில் இன்று மின் தடை! CLICK NOW

திண்டுக்கல்: காந்திகிராமம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பிள்ளையார்நத்தம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வெள்ளோடு, கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, அன்னை நகர், சரவணா மில், சீவல்சரகு, வல்க்கம்பட்டி, கும்மம்பட்டி, மக்கேல் பட்டி, அனுமந்தராயன் கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே SHARE