News March 31, 2024

கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் வாங்கிய அண்ணாமலை

image

கச்சத்தீவு இலங்கைக்கு 1974இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில், 1974ஆம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு, கச்சத்தீவு மீதான உரிமையை
இலங்கைக்கு அளித்த தகவலை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 1961ல் கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளிக்க தயங்க மாட்டேன் என நேரு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக கூடாதா? ஓவைசி

image

ஹிஜாப் அணிந்த ஒரு பெண் இந்தியாவின் பிரதமராக வருவதைக் கனவு காண்பது ஒரு குற்றமா என AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். சிலநாட்களுக்கு முன்பு நாட்டைக் குழிதோண்டிப் புதைக்கும் இதுபோன்ற சிந்தனைகள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக, இப்படி ஒரு கனவை காண அரசியலமைப்புச் சட்டம் எங்களை தடுக்கிறதா என ஓவைசி காட்டமாக பேசியுள்ளார்.

News January 21, 2026

உரிமைத் தொகை உயர்வு.. அறிவிக்கிறார் CM ஸ்டாலின்

image

CM ஸ்டாலின் தலைமையிலான நடப்பு திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாளை முதல் வழக்கமான அலுவல்கள், கேள்வி-பதில்களை தொடர்ந்து CM ஸ்டாலின் முக்கிய <<18911897>>அறிவிப்புகளை<<>> வெளியிடவுள்ளார். அதில், CM ஏற்கெனவே கூறியது போல் மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பு இடம்பெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மிக விரைவில் மகளிருக்கான இனிப்பான செய்தியை எதிர்பார்க்கலாம்.

News January 21, 2026

தேர்வு கிடையாது.. ₹25,000 சம்பளம்: APPLY HERE

image

ஆதார் மையங்களில் சூப்பர்வைசர்/ ஆபரேட்டர் பிரிவுகளில் காலியாகவுள்ள 282 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, 12th, ITI. தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹25,000 முதல் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.31. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!