News March 31, 2024

டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்தால் விசாரணை

image

தேர்தலையொட்டி வழக்கத்தைவிட 30%க்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில், அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மொத்தமாக மதுபானங்களை விற்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையின் விற்பனை விவரமும் தினசரி சரிபார்க்கப்படுகிறது. வழக்கத்தை விட விற்பனை அதிகரித்திருந்தால் சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Similar News

News January 16, 2026

பாஜக புதிய தேசிய தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

image

பாஜகவின் செயல் தலைவராக பிஹாரைச் சேர்ந்த நிதின் நபின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜன.20-ல் பாஜகவின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19-ல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிதின் நபினே போட்டியின்றி பாஜகவின் புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

News January 16, 2026

₹1 கோடி லாட்டரி வென்றவர் கடத்தல்!

image

‘பேராசை பெரும் நஷ்டம்’ என்பதை உண்மையாக்கும் சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கண்ணூரை சேர்ந்த சாதிக் என்பவருக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழ, பேராசையில் வரி ஏய்ப்பு செய்து அதிக பணத்தை பெற திட்டமிட்டுள்ளார். இதற்காக டிக்கெட்டை விற்க முயன்றுள்ளார். இதை பயன்படுத்திய கும்பல், அதிக பணம் தருவதாக அவரை காரில் ஏற்றிச் சென்று பரிசு டிக்கெட்டை பறித்து கொண்டு நடுரோட்டில் இறக்கிவிட்டுள்ளது. SO, NO பேராசை!

News January 16, 2026

₹4,000.. வந்தது மகிழ்ச்சியான செய்தி

image

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 22-வது தவணை வரும் பிப்ரவரியில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் 21வது தவணைத் தொகையை பெறாத விவசாயிகளின் கணக்குகளில் அத்தொகையும் சேர்த்து மொத்தம் ₹4,000 வரவு வைக்கப்படும் என தகவல் வந்துள்ளது. அதற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் e-KYCஐ முடிக்க வேண்டும் எனவும், வங்கி கணக்கை ஆதாருடன் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!