News March 10, 2025

கனமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலெர்ட்

image

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை (மார்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

Similar News

News March 10, 2025

பச்சோந்தி அரசியல் செய்கிறது திமுக: ஜெயக்குமார்

image

PM SHRI பள்ளிகள் விவகாரம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். இதுகுறித்து பேசிய அவர், PM SHRI திட்டத்தை ஸ்டாலின் முதலில் ஏற்றுக்கொண்டதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும், இதிலிருந்து திமுக பச்சோந்தித்தனமான சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 10, 2025

மறுசீரமைப்பு விவகாரம்: மாற்றி யோசிக்கும் சவுத் முதல்வர்கள்!

image

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்ற அறிவிப்பால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால், ஆந்திர CM சந்திரபாபு நாயுடு, தமிழக CM ஸ்டாலின் ஆகியோர் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க ஊக்கப்படுத்துகின்றனர். இதில் ஒருபடி மேலே போய், அதிக குழந்தை பெறுபவர்களுக்கு பசு, கன்று, ₹50,000 என பரிசுகளை அறிவித்திருக்கிறார் TDP எம்பி அப்பலா. உங்கள் கருத்து என்ன?

News March 10, 2025

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. தேதி குறிச்சாச்சு…

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்து வருகிறார். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுனிதா மற்றும் பட்ச் வில்மோர் பூமி திரும்ப முடியவில்லை. இந்நிலையில் இருவரும் மார்ச் 16ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

error: Content is protected !!