News March 10, 2025

போராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு

image

உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக TN அரசால் நடத்தப்படும் ‘செட்’ தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள், விரைவில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் 4,000 உதவி பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 2 முறை, செட் தேர்வு நடத்தி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.

Similar News

News March 10, 2025

பார்லி. வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்

image

மத்திய அமைச்சர் பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். PM SHRI திட்டத்தில் முதலில் கையெழுத்திட முன்வந்த TN CM, பின்னர் யூடர்ன் அடித்துவிட்டதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். யாரோ ஒரு சூப்பர் முதல்வர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

News March 10, 2025

பச்சோந்தி அரசியல் செய்கிறது திமுக: ஜெயக்குமார்

image

PM SHRI பள்ளிகள் விவகாரம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். இதுகுறித்து பேசிய அவர், PM SHRI திட்டத்தை ஸ்டாலின் முதலில் ஏற்றுக்கொண்டதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும், இதிலிருந்து திமுக பச்சோந்தித்தனமான சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 10, 2025

மறுசீரமைப்பு விவகாரம்: மாற்றி யோசிக்கும் சவுத் முதல்வர்கள்!

image

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்ற அறிவிப்பால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால், ஆந்திர CM சந்திரபாபு நாயுடு, தமிழக CM ஸ்டாலின் ஆகியோர் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க ஊக்கப்படுத்துகின்றனர். இதில் ஒருபடி மேலே போய், அதிக குழந்தை பெறுபவர்களுக்கு பசு, கன்று, ₹50,000 என பரிசுகளை அறிவித்திருக்கிறார் TDP எம்பி அப்பலா. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!