News March 10, 2025
ராகுல் உதவியால் தொழிலதிபர் ஆகும் தொழிலாளி

ராகுல் காந்தி செய்த தொடர் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி, தொழிலதிபராக உள்ளார். உ.பி. சுல்தான்பூரில் உள்ள தொழிலாளி ராம்செட்டின், செருப்பு கடைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்று ராகுல் உரையாடினார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவரை தோல்பொருள் வியாபாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ‘ராம்செட் மோச்சி’ என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை அந்த நபர் பெற உள்ளார்.
Similar News
News March 10, 2025
பூண்டு விலை கடும் சரிவு!

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் முதல் ரக பூண்டு ஒரு கிலோ ₹90 ஆகக் குறைந்துள்ளது. 2ஆம் ரக பூண்டு ₹80க்கும், 3ஆம் ரக பூண்டு ₹70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ₹100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கிலோ பூண்டு ₹400 முதல் ₹500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை குறைப்பால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 10, 2025
சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 2 நிரந்தர நீதிபதிகள்!

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த இருவருக்கும், நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், இன்னும் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
News March 10, 2025
திரைத்துறையை அதிர வைத்த பாலியல் வழக்குகளில் திருப்பம்

கேரள திரைத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் புகார்தாரர்கள் வாக்குமூலம் அளிக்கவில்லை. விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பினாலும், அதற்கு பதில் அளிக்கவும் இல்லை. பெண்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க முன்வராத காரணங்களால், பல வழக்குகள் தள்ளுபடியாக வாய்ப்புள்ளது.