News March 10, 2025
பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு இன்று தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கி ஏப்.4 வரை நடைபெற உள்ளது. முதலாவது அமர்வு கடந்த ஜன.31 முதல் பிப்.13 வரை நடந்தது. தொடர்ந்து, 2ஆவது அமர்வு கூட்டத்தில், மணிப்பூர் கலவரம், இந்தியாவை டிரம்ப் நிர்வாகம் கையாளும்விதம் உள்ளிட்டவைக் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில், இக்கூட்டத்தொடரில் வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
Similar News
News March 10, 2025
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. இதில் பட்ஜெட் தொடர்பாக 13 மசோதாக்களையும், மணிப்பூர் மாநில பட்ஜெட்டையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
News March 10, 2025
‘அவசர’ பிரச்சினையால் திக்குமுக்காடிய ‘ஏர் இந்தியா’

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டெல்லிக்கு 348 பயணிகளுடன் நேற்றிரவு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 10 கழிவறைகள் இருந்த நிலையில், அதில் ஒன்று மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனால் 10 மணிநேரமாக கடும் சிரமத்தை சந்தித்த பயணிகள், ஒருகட்டத்தில் கோபமடைந்தனர். இதனால் வேறு வழியின்றி மீண்டும் சிகாகோவுக்கே விமானம் திரும்பிச் சென்றது. என்ன கொடுமை பாஸ்..
News March 10, 2025
மாயமான இந்திய மாணவி: தேடும் பணி தீவிரம்

டொமினிகன் குடியரசில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வரும் அவர், டொமினிகன் குடியரசில் உள் ரியூ ரெப்யூப்ளிகா ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் குளிக்கச் சென்றபோது மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சக மாணவிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.