News March 9, 2025
5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா…!

CT ஃபைனலில் 252 ரன்கள் இலக்கை எட்ட இந்திய அணி போராடி வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 76 ரன்னில் அவுட் ஆக, நிதானமாக விளையாடி ஸ்ரேயஸ் ஐயர் ரன் குவிப்பில் ஈடுபட்டார். 2 ரன்னில் அரை சதத்தை நழுவ விட்ட அவர் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தபோது, சான்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து, அக்சர் படேலும் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
Similar News
News July 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News July 9, 2025
பிகினியில் பிரபல நடிகை… வைரலாகும் PHOTOS

பாலிவுட் நடிகை கரீனா கபூரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் அவர் வெளிநாடு சென்றபோது எடுத்ததா அல்லது போட்டோ ஷூட்டுக்காக எடுத்ததா எனத் தெரியவில்லை. இந்நிலையில், 44 வயதிலும் கரீனா இவ்வளவு இளமையுடனும், ஃபிட்டாகவும் இருக்கிறாரே என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
News July 9, 2025
நாளை ‘பாரத் பந்த்’ ஏன்?

நாளை நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில், வங்கி, இன்ஷூரன்ஸ், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்களிப்பர் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவாசயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும், சிறந்த பணிப் பாதுகாப்பு, சம்பளம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை கோரியும் இந்த பந்த் நடைபெறுகிறது.