News March 9, 2025
சிவகாசியில் பட்டாசு தொழிலாளி வெட்டி கொலை

சிவகாசி முருகன் காலனி சாலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகில் இன்று சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (30) என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியுடன் மாரிமுத்து என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அவரை சில நாட்களுக்கு முன் கருப்பசாமி கண்டித்த நிலையில் அவர் தலைமையிலான கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்.
Similar News
News August 24, 2025
BREAKING சாத்தூர் அருகே விபத்தில் 35 பேர் காயம்

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இருக்கன்குடிக்கு மொட்டை எடுப்பதற்காக சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கோவில்பட்டி – நல்லி சத்திரத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் டயர் வெடித்து வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி, தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News August 24, 2025
விரைவில் திறக்கப்பட உள்ள புதிய கட்டிடம்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அண்மையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக இந்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.34 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 20230ம் ஆண்டு துவங்கியது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த கட்டடம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 24, 2025
விருதுநகரில் வாடகை வீட்டில் இருப்பவரா நீங்க?

விருதுநகர் மக்களே… வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். மீறினால் விருதுநகர் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000474, 9445000475, 9944242782 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க நண்பர்களே…