News March 9, 2025
உறவுக்கு மறுப்பு.. கொடூரமாக கொலை

செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கத்தை சேர்ந்த சங்கரின் மனைவி செல்வராணிக்கும், குமரேசன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால், குமரேசன் உடனான உறவை செல்வராணி துண்டித்துள்ளார். உறவுக்கு அழைத்தும் வரவில்லை. இந்நிலையில் நைசாக பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று செல்வராணியை குமரேசன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
Similar News
News March 10, 2025
திமுக மூத்த தலைவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திமுக மூத்த தலைவர் பி.எஸ்.ராஜராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர திமுக அவைத் தலைவராகப் பதவி வகித்த ராஜராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். ராஜராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
News March 10, 2025
13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி.. இளையராஜா செம ஹேப்பி!

சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இளையராஜா, நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மொமண்ட்டிற்கும் கைதட்டி ரசிகர்கள் கொண்டாடினர் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அனைவரும் மனமார வாழ்த்தியதால் தான், நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றது எனவும், அரசின் சார்பாக வரவேற்றது மகிழ்ச்சி என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியை 13 நாடுகளில் நடத்த தேதி குறிச்சாச்சு எனக் கூறி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
News March 10, 2025
தாயை பின் தொடரும் ஸ்ரீதேவியின் மகள்

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ படத்தின் 2ஆம் பாகத்தில் அவரின் மகள் குஷி கபூர் நடிக்க உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரது தந்தை போனி கபூர் ‘மாம் 2’ படத்தை தானே தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தனது மகள்கள் இருவரும் ஸ்ரீதேவியின் வழியில் செல்வதையே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மாம் படத்திற்காக ஸ்ரீதேவி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.