News March 9, 2025
2 மாவட்டங்களில் நாளை விடுமுறை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (மார்ச் 10) விடுமுறை ஆகும். அதேபோல், வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே நடைபெறும் பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2025
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 5 பேர் பலி!

மும்பையின் நக்படா பகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஹசிபல் ஷேக், ராஜா ஷேக், ஜியாவுல்லா ஷேக், ஹிமாந்த் ஷேக் ஆகியோர் நேற்று உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சைப் பலனின்றி பர்ஹான் ஷேக் இன்று மரணமடைந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விஷவாயு தாக்கியது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2025
நீங்க டெய்லி தலைக்கு குளிக்கும் பழக்கம் இருப்பவரா?

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு 4 முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தூசி, அழுக்கு, மாசு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், தினமும் தலைக்கு குளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அழுக்கு அதிகமாகப் படிவது, முடியின் ஆரோக்கியத்திற்கு கேடு. சம்மர் சீசனில், உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் வாரத்திற்கு நான்கு முறை குளித்து விடுங்கள். SHARE IT.
News March 10, 2025
திமுக மூத்த தலைவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திமுக மூத்த தலைவர் பி.எஸ்.ராஜராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர திமுக அவைத் தலைவராகப் பதவி வகித்த ராஜராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். ராஜராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.