News March 9, 2025
அரவக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்து

அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை ரங்கமலை கணவாய் அருகே திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சேர்ந்த குடும்பம் வெள்ளகோவில் நாட்ராயன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது டயர் வெடித்ததில் கார் இடதுபுறம் இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க் அறிவிப்பு பலகையில் மோதி கீழே உருளாமல் நின்றது. இதனால் யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லை.
Similar News
News September 10, 2025
கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

கரூர் மாவட்டத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில் வருகின்ற 13.09.2025-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்:04324-296570 தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான இளவழகன் கேட்டுக்கொள்கிறார்.
News September 10, 2025
கரூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்

கரூர் மாநகராட்சியில், வார்டு எண்.6,10-ற்க்கு வெங்கமேடு முத்து மஹாலிலும், கடவூர் வட்டாரத்தில், முள்ளிப்பாடி மற்றும் பாலவிடுதி ஆகிய ஊராட்சிகளுக்கு பாலவிடுதி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நாளை 11.09.2025 நடைபெறவுள்ளது. என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News September 10, 2025
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக அபிராமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற இணைப்பதிவாளருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட கூட்டுறவு சங்க செயலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.