News March 9, 2025
இனி ATM-லேயே தங்கக் கடனை பெறலாம்..!

தங்கத்தை வைத்து கடன் வாங்க, இனி வங்கிக்கு போக வேண்டாம். ஆம், ATM மூலமாகவே தங்கக் கடனை பெறும் முறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ ATM-இல் தங்க நகைகளை வைத்தாலே போதும். அதுவே எடை பார்த்து இன்றைய மார்க்கெட் விலையில் கடன் தொகையை கொடுத்துவிடும். இந்த முறையை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த சென்ட்ரல் பாங்க் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News July 9, 2025
நள்ளிரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணிவரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமாம். உங்கள் ஊரில் மழை பெய்யுதா?
News July 9, 2025
பிரபல நடிகர் டேவிட் கில்லிக் மரணம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் கில்லிக்(87) காலமானார். வயது மூப்பின் காரணமாக இவர் லண்டனில் உள்ள ஹாஸ்பிடலில் மரணமடைந்துள்ளார். கிட்டத்தட்ட 6 தசாப்தங்களாக நடித்து வரும் இவர், அண்மையில் ரசிகர்களை ஈர்த்த ‘The Crown’ வெப்தொடர், ‘In A Touch of Frost’, ‘A Bridge Too Far’ போன்ற மெகா ஹிட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News July 8, 2025
இபிஎஸ், செங்கோட்டையன் இடையே மீண்டும் மோதலா?

2026 தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார் இபிஎஸ். கோவையில் பரப்புரையை தொடங்கியபோது, அவருடன் செங்கோட்டையன் இல்லாததது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த பிரச்னை சுமுகமாக முடிந்தது. இந்நிலையில், மீண்டும் பனிப்போர் தொடங்கிவிட்டதாக பேசப்படுகிறது. அதேநேரத்தில், ஈரோட்டுக்கு இபிஎஸ் பரப்புரைக்கு செல்லும்போது, செங்கோட்டையன் உடனிருப்பார் என சொல்லப்படுகிறது. எது உண்மையோ?