News March 31, 2024
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அண்ணாமலை உள்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News May 7, 2025
BREAKING: மும்பை அணி அபார வெற்றி

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடிக்க மும்பை அணி 217 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரில் சூர்யவன்சியையும், 2-வது ஓவரில் ஜெய்ஸ்வாலையும் இழந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் ராஜஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு MI சென்றது.
News May 7, 2025
வங்கிகளுக்கு மே மாதம் 7 நாள்கள் விடுமுறை

பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளுக்கு இந்த மாதம் தமிழகத்தில் 7 நாள்கள் விடுமுறையாகும். அதன்படி, மே 1 இன்று பொது விடுமுறை. வருகிற 4-ம் தேதி ஞாயிறு என்பதால் அன்றும் வங்கிகள் திறக்கப்படாது. இதேபோல், வரும் 10, 11-ம் தேதிகள், 18, 24, 25-ம் தேதிகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. அன்றைய நாள்களும் வங்கிகள் திறக்கப்படாது. ஆதலால் வங்கி செல்ல இருப்போர், திட்டமிட்டு செல்லும்படி வலியுறுத்தப்படுகிறார்கள்.
News May 7, 2025
ராசி பலன்கள் (02.05.2025)

➤மேஷம் – உதவி ➤ரிஷபம் – தாமதம் ➤மிதுனம் – பணிவு ➤கடகம் – சுபம் ➤சிம்மம் – அசதி ➤கன்னி – பாசம் ➤துலாம் – பிரீதி ➤விருச்சிகம் – தனம் ➤தனுசு – பக்தி ➤மகரம் – சுகம் ➤கும்பம் – நட்பு ➤மீனம் – நலம்.