News March 9, 2025
11ஆம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 36 வயது பெண்!

மகாராஷ்ட்ரா, நாக்பூரில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கும், 3 பிள்ளைகளின் தாயான 36 வயது பெண்ணுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவனது பெற்றோர், சிறுவனை வேறு
இடத்தில் தங்க வைத்துள்ளனர். ஆனாலும், அப்பெண் மீது கொண்ட மோகத்தால், அச்சிறுவன் ஊரை விட்டு ஓடியுள்ளார். புகாரின் பேரில் சிறுவனை கண்டுபிடித்த போலீசார், அப்பெண் மீது கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளனர். கலிகாலம்டா சாமி.
Similar News
News March 10, 2025
கனமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலெர்ட்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை (மார்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News March 10, 2025
ஆரம்பமே அமர்க்களம்: டிரம்புக்கு டஃப் தரும் கார்னே

கனடா பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வங்கியின் முன்னாள் கவர்னரான இவர், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்கப் போவதில்லை என டிரம்புக்கு டஃப் கொடுத்துள்ளார். பிரதமர் போட்டியில், துணை பிரதமர், முன்னாள் அமைச்சர் என 4 பேரை முந்தியிருக்கிறார். இதுவரை தேர்தலையே சந்திக்காதவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகி இருக்கிறது.
News March 10, 2025
இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவு

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும். அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.