News March 9, 2025

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றம்?

image

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வருமான வரி செலுத்துவோர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர், சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோர், அரசு ஊழியர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 10, 2025

ஆரம்பமே அமர்க்களம்: டிரம்புக்கு டஃப் தரும் கார்னே

image

கனடா பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வங்கியின் முன்னாள் கவர்னரான இவர், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்கப் போவதில்லை என டிரம்புக்கு டஃப் கொடுத்துள்ளார். பிரதமர் போட்டியில், துணை பிரதமர், முன்னாள் அமைச்சர் என 4 பேரை முந்தியிருக்கிறார். இதுவரை தேர்தலையே சந்திக்காதவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகி இருக்கிறது.

News March 10, 2025

இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவு

image

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும். அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2025

KV பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

image

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள 45 KV பள்ளிகளில், சில பள்ளிகளில் மட்டுமே 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பால்வாடிகா என்ற KG முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் வசதி உள்ளது. அதன்படி, <>https://balvatika.kvs.gov.in/<<>> என்ற தளத்தில் வரும் 21ம் தேதிக்குள் குழந்தைகளின் விபரங்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!