News March 9, 2025
பெரம்பலூர்: 332-பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் சார்பில் நேற்று (08.03.2025) தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 332 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்த நிகழ்வின்போது பெரம்பலூர் எம்.பி அருண்நேரு மற்றும் எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Similar News
News September 22, 2025
பெரம்பலூர்: கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் கூட்டுறவு தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.drbpblr.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துத் தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். SHARE IT NOW…
News September 22, 2025
பெரம்பலூர்: மின் மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2025) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.
News September 21, 2025
தீபாவளிக்கு அதிக கூடுதல் பேருந்து இயக்க மைச்சர் முடிவு

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கர் அவர்களிடம் கேட்டபோது தீபாவளி பண்டிகைக்கு கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பேருந்து வசதி இருக்குமென தெரிவித்துள்ளார். இதைப்பற்றி போக்குவரத்து துறை மேலாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.