News March 9, 2025

அம்பையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியுள்ளது. களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டம், ஈர நிலங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் பறவைகளை ஆர்வமுடன் கணக்கெடுத்து வருகின்றனர்.

Similar News

News March 10, 2025

ராகுல் உதவியால் தொழிலதிபர் ஆகும் தொழிலாளி

image

ராகுல் காந்தி செய்த தொடர் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி, தொழிலதிபராக உள்ளார். உ.பி. சுல்தான்பூரில் உள்ள தொழிலாளி ராம்செட்டின், செருப்பு கடைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்று ராகுல் உரையாடினார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவரை தோல்பொருள் வியாபாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ‘ராம்செட் மோச்சி’ என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை அந்த நபர் பெற உள்ளார்.

News March 10, 2025

CUET PG நுழைவு சீட்டு வெளியீடு

image

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வுக்கு 4,12,024 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்.1ஆம் தேதி வரை கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை <>https://exams.nta.ac.in/CUET-PG<<>> என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

News March 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 202 ▶குறள்: தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். ▶பொருள்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்..

error: Content is protected !!