News March 31, 2024
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல்

ஐஎஸ் அமைப்பு திடீர் மிரட்டல் விடுத்திருப்பதால், நாடு முழுவதும் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2014இல் ரமலானின்போது ஐஎஸ் உருவாக்கப்பட்டது. இந்தாண்டுடன் 10 ஆண்டு ஆவதையொட்டி, அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “உலகெங்கிலும் ஐஎஸ் அமைப்பினர் தனிநபர் தீவிரவாத தாக்குதலை நடத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார். இதனால் நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
பயங்கரவாத எதிர்ப்பில் பாக்., USA பாராட்டு

பாகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை கூறியுள்ளார் USA வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாக்., ஈடுபடுவதாக பாராட்டியுள்ள அவர், இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன், கனிம வளங்கள் ஆகியவற்றில் புதிய பொருளாதார ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 14, 2025
தங்கம் ₹1,440 சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!

இறங்கு முகத்தில் இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹1,440 சரிந்துள்ளது. ஆக. 8-ல் ₹75,760-க்கு விற்கப்பட்டு வந்த 1 சவரன், இன்றைய நிலவரப்படி ₹74,320-க்கு விற்பனையாகி வருகிறது. பொதுவாக, ஆடி மாதத்தில் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. தற்போது, ஆவணி தொடங்க இருப்பதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் இந்த விலை சரிவை பயன்படுத்தி கொள்ளலாம்.
News August 14, 2025
சர்க்கரையை குறைக்க Sugar Diet மட்டும் போதுமா?

நம்மில் பெரும்பாலானோர் ரத்த சர்க்கரை நோய்க்கு ஆளாகாமல் இருக்க Sugar Diet இருப்பதுண்டு. ஆனால் உணவு மட்டுமே சர்க்கரை நோய் வர காரணம் கிடையாது. நாள்பட்ட மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், அதீத உடற்பயிற்சி, ஹார்மோன் மாற்றங்களும் சர்க்கரையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் sugar diet மட்டும் இல்லாமல் இவை அனைத்தையும் நீங்கள் சமாளித்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம்.