News March 31, 2024
திருச்சி: 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

திருச்சி கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 25 நபர்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். மேலும், அனுமதி பெறாத வாகனங்களில் ஊர்வலமாக சென்று சட்டவிரோதமாக வாக்குகள் சேகரித்ததாக வேட்பாளர் ராஜேஷ், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
திருச்சி: மகனை அரிவாளால் வெட்டிய சித்தப்பா

கருப்பகோவில்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (33). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தினேஷ் சொத்து பிரச்சனை தொடர்பாக சித்தப்பா சண்முகத்திடம் பேசினார். அப்போது, ஏற்பட்ட தகராறில் சண்முகம் அங்கிருந்த அரிவாளை எடுத்து தினேஷை வெட்டினர். இதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.
News November 18, 2025
திருச்சி: மகனை அரிவாளால் வெட்டிய சித்தப்பா

கருப்பகோவில்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (33). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தினேஷ் சொத்து பிரச்சனை தொடர்பாக சித்தப்பா சண்முகத்திடம் பேசினார். அப்போது, ஏற்பட்ட தகராறில் சண்முகம் அங்கிருந்த அரிவாளை எடுத்து தினேஷை வெட்டினர். இதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.
News November 18, 2025
திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் நவ.21ஆம் தேதி காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர் பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


