News March 8, 2025
திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

இந்துக்கள் கோயில் கட்ட ஜமாத் அமைப்பினர், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, திருப்பூர் அருகே விநாயகர் கோயில் கட்டுவதற்கு, தானமாக நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள், குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
Similar News
News March 10, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 09.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம், உங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
News March 9, 2025
கேட்ட வரம் கொடுக்கும் கொண்டத்துக்காளியம்மன்

திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக்காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குண்டம் திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.
News March 9, 2025
திருப்பூர்: அதிமுக காணொலி கலந்தாய்வு கூட்டம்

அதிமுக நிர்வாகிகள் பங்கு பெறும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையிலான அனைத்து கழக மாவட்டங்களும் ஒரே சமயத்தில் இணையும் காணொளி கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த காணொளி கலந்தாய்வு கூட்ட நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.