News March 8, 2025

ஆட்டோ மோதி முதியவர் காயம் போலீஸ் விசாரணை

image

திருவட்டாறு அருகே செங்கோடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பேபி சுலக்சனா வயது 62. இவரது கணவர் கிறிஸ்டோபர் வயது 66. இவர் சைக்கிளில்  பால் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தபோது, வின்சென்ட் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News May 7, 2025

மே தின பேரணியில் கலந்து கொண்ட குமரி எம்எல்ஏ

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சார்பில் குலசேகரத்தில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (மே 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நடைபெற்ற பேரணியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

News May 7, 2025

குமரி விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாற்றங்கால் பணிகளை தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டு மே மாத இறுதிக்குள் பணிகளை முடித்து ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணிகளை மேற்கொள்ள முன் ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

News May 7, 2025

குமரி மாவட்டத்தில் 1522 கேமராக்கள் நிறுவ முடிவு

image

குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்புத் திட்டத்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் படி ஒரு கிராமத்தில் ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 761 கிராமங்களில் 1522 கேமராக்கள் பொருத்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

error: Content is protected !!