News March 7, 2025
நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் – ஆட்சியர் தகவல்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் கரிகால சோழ கலையரங்கத்தில் சனிக்கிழமை (08.03.2025) காலை 10.45 மணி அளவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.
Similar News
News August 13, 2025
திருவையாறில் லாரி மோதி வாலிபர் பலி

திருவையாறு பங்களா தெருவை சேர்ந்தவர் குணசீலன்(30). இவர் விளாங்குடி மெயின் ரோட்டில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி குணசீலன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குணசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்போ ஓடிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
News August 13, 2025
குண்டர் சட்டத்தில் அடைக்க தஞ்சை ஆட்சியர் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குப்பாட்ட பகுதியை சேர்ந்த தனது மாமனாரை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளியான தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந் ராவ் (வயது-42), இவரை மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
News August 13, 2025
தஞ்சை: மத்திய அரசு வேலை! தேர்வு கிடையாது..

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <