News March 31, 2024

கோவர்தன கிரி வாகனத்தில் கோபாலன்

image

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.

Similar News

News August 14, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (14.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு மேற்கண்ட எண்களை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

சுதந்திர தின அட்டவணை வெளியீடு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் சுதந்திர தின நிகழ்ச்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் விழா மேடைக்கு வருகை தந்து 9:05 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வும், 9.07 க்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வும், 9:15 க்கு சிறப்பாக பணி புரிந்த அரசு அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கல், 9:30 க்கு கலை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

திருவாரூர்: 430 ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம்,இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!