News March 7, 2025

இராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் 7வது புத்தகத் திருவிழா இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மார்ச்.21 முதல் 30 வரை நடக்கிறது. இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி புத்தக பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பல ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இதே போல ஓவியங்கள், மூலிகைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. *மறக்காம புத்தக வாசிப்பாளர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 30, 2025

800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் சிவன் கோயிலில் பாண்டியர் காலத்து 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் எமனேஸ்வரம் சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அம்மன் சன்னதியில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு தான் இக்கோயிலில் பழமையானது. எனவே இங்குள்ள கல்வெட்டு கி.பி13 ஆம் நுாற்றாண்டு சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.*ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

பரமக்குடி: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

image

பரமக்குடி அருகே போகலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 29) ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.2,56,000 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசை, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். மேலும், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 30, 2025

மே 22ல் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தில். ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல் குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாஹிர் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மே 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி மே 22 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தார்.

error: Content is protected !!