News March 31, 2024

6 அடி நீளம்… படமெடுத்த நாகம்

image

நாட்டறம்பள்ளி அடுத்த வள்ளியூர் கிராமத்தில் கருணாமூர்த்தி என்பவரது குடியிருப்பு வீட்டில் பாம்பு இருப்பதாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Similar News

News August 14, 2025

மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஆட்சியர் அலுவலகம்

image

இந்திய நாடு முழுவதும் நாளை (15.08.2025) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களும் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஜொலித்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

News August 14, 2025

திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட்15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியேற்றுகிறார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் மாவட்ட எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 511 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செளமியா தெரிவித்தார்.

News August 14, 2025

திருப்பத்தூர்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள நுழைவு வாயில் மற்றும் ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளின் உடைமைகள், பயணிகளின் ரயில்களில் தீவிர சோதனை செய்தனர்.

error: Content is protected !!