News March 7, 2025
தூத்தக்குடியில் 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. mஅப்போது அங்குள்ள வடக்கு தெருவில் ஒரு இடத்தில் 1400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த கணேசன், முத்தரசன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
▶️ மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 14,90,425
▶️ இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
▶️ ஆழ்கடல் முத்துக் குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க
News August 25, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சிறுவர்களுக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோ ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மீறினால் அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
BREAKING கோவில்பட்டி அருகே விபத்தில் 35 பேர் காயம்

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இருக்கன்குடிக்கு மொட்டை எடுப்பதற்காக சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கோவில்பட்டி – நல்லி சத்திரத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் டயர் வெடித்து வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி, தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.