News March 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 199 ▶குறள்: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். ▶பொருள்: அரும்பயன்களை ஆராய்ந்து மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
Similar News
News March 9, 2025
GST கட்டணம் குறைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

விரைவில் ஜிஎஸ்டி கட்டணம் மேலும் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவைக்கேற்ப திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பதாகக் கூறிய அவர், அதனுடன் வரி அடுக்குகள் பகுத்தாய்வு செய்யப்படும் என்றார். ஜிஎஸ்டி அமலானதற்கு பிறகு விலை உயரவில்லை எனவும், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதே தங்களது இலக்கு என்றும் கூறினார்.
News March 9, 2025
தமிழகத்தில் மின் பயன்பாடு அதிகரிப்பு

கடும் வெயில், பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40.62 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்தாண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவாகும். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.2024 மே 2ல், உச்ச அளவாக மின் நுகர்வு, 45.43 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
News March 9, 2025
இன்றைய பொன்மொழிகள்!

*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். *செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. *நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும். *மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து சாவது மேலானது. *எதிரிகளும், தோல்வியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். * எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது – சே குவேரா.