News March 7, 2025

அனிதா ராதாகிருஷ்ணனின் நாளைய நிகழ்ச்சிகள்

image

மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.07) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணியளவில் திருச்செந்தூர் தெய்வா திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, 11 மணிக்கு நா.முத்தையாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு, 11.30 க்கு உடன்குடியில் சமுதாய வளைகாப்பிலும் பங்கேற்கிறார்.

Similar News

News August 25, 2025

தூத்துக்குடி மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

image

▶️ மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
▶️ மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 14,90,425
▶️ இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
▶️ ஆழ்கடல் முத்துக் குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க

News August 25, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சிறுவர்களுக்கு விழிப்புணர்வு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோ ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மீறினால் அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

BREAKING கோவில்பட்டி அருகே விபத்தில் 35 பேர் காயம்

image

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இருக்கன்குடிக்கு மொட்டை எடுப்பதற்காக சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கோவில்பட்டி – நல்லி சத்திரத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் டயர் வெடித்து வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி, தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!