News March 7, 2025
தந்தையின் ஈகோவுக்கு பலியான பிஞ்சுக் குழந்தை!

உ.பி.யைச் சேர்ந்த மோகித் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டுக்காரரான ராமு என்பவருக்கும் சமீபத்தில் சண்டை ஏற்பட்டது. ஆனால், மோகித்தின் 5 வயது மகளான தானி, எப்போதும் போல ராமுவின் வீட்டுக்கு சென்று விளையாடி வந்திருக்கிறாள். பலமுறை சொல்லியும் மகள் கேட்காததால் ஆத்திரமடைந்த மோகித், குழந்தை தானியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 4 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். தற்போது மோகித் சிறையில் உள்ளார்.
Similar News
News March 7, 2025
இந்தியாவை கௌரவித்த பார்படாஸ்.. மோடி நெகிழ்ச்சி…

பார்படாஸ் நாட்டின் சார்பில் ‘Honorary Order of Freedom of Barbados’ விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவரது சார்பில் இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மர்கெரிட்டா பெற்றுக்கொண்டார். இதற்காக பார்படாஸ் அரசு மற்றும் மக்களுக்கு மோடி,தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் நெருங்கிய உறவுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 7, 2025
Employee Appreciation Day.. இன்றாவது பாராட்டுங்களேன்!

ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளி Employee Appreciation Day, அதாவது ஊழியர்கள் பாராட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. கம்பெனிக்காக கடினமாக உழைக்கும் பெஸ்ட் ஊழியர்களை இன்று மனதார பாராட்டுங்களேன் சீனியர்ஸ்! சம்பள உயர்வு போலவே, பாராட்டும் ஒருவனை கடினமாக உழைக்கத் தூண்டும். Increment தான் வருஷத்துக்கு ஒரு வாட்டி தர்றீங்க, பாராட்டவாவது செய்யுங்களேன் ஆபீசில் நீங்க வாங்குன பெஸ்ட் பாராட்டு எது?
News March 7, 2025
அதிமுகவில் இருந்து EX எம்எல்ஏ விஜயகுமார் நீக்கம்

EX எம்எல்ஏ விஜயகுமாரை அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாகவும் இபிஎஸ் அறிவித்துள்ளார். பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் விஜயகுமார் கையெழுத்திட்டதால், நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.