News March 6, 2025
CISF படையில் 3 ஆண்டுகளில் 50,000 பணியிடங்கள்

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக அதன் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களை தொடர்புகொள்ள நாடு முழுவதும் 10 இடங்களில் பொது தகவல் மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் அவசர உதவிகள் பெறலாம் என்றும் குறிப்பிட்டார். இளைஞர்களே, இந்த வேலைவாய்ப்பை குறித்து வையுங்கள். விரைவில் அறிவிப்பு வரலாம்.
Similar News
News March 7, 2025
ரோஹித் கொடுக்கப்போகும் பயங்கர அதிர்ச்சி

சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலுடன் சர்வதேச ODI போட்டிகளில் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி20 உலகக்கோப்பையில் நடந்தது போலவே, CT கோப்பை வென்று கொடுத்த பின் அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அடுத்த ஒரு ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டு, சர்வதேச போட்டிகளுக்கு Good Bye சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News March 7, 2025
நாளை கெடு.. மணிப்பூரில் அமைதி திரும்புமா?

மணிப்பூரில் நாளை முதல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மலைப் பகுதி மக்களுக்கு தனி நிர்வாகம் அல்லது யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என பழங்குடி அமைப்புகள் போர் கொடி தூக்கியுள்ளன. இதற்கு மெய்தி அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மலைப்பகுதியை நோக்கிய பேரணியை அறிவித்துள்ளதால், பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
News March 7, 2025
Work From Homeல் இன்ஃபோஸிஸ் கட்டுப்பாடு

Work From Home முறையில் கட்டுப்பாடு விதிக்க, தலைமை பொறுப்பில் இருக்கும் ஊழியர்களுக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளது. ஒரு மாதத்திற்கு கட்டாயம் 10 நாள்கள் அலுவலகத்தில் பணி செய்ய வேண்டும் எனவும், இந்த நடைமுறை வரும் 10ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. வேலை நிலை 5ல் உள்ளவர்கள், அதாவது TL, சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது பொருந்தும்.