News March 6, 2025
BREAKING: 14 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படை 14 தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. மன்னார் தெற்கு கடற்பரப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்களின் கைதை தடுக்க கோரிக்கை விடுத்தாலும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
Similar News
News March 7, 2025
ALERT: ஃபேஸ்புக் யூஸ் பண்றீங்களா?

சர்க்கரை நோய்க்கு எலான் மஸ்க் மருந்து கண்டுபிடித்துள்ளதாக AIஆல் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரவி வருகின்றன. இதனால் மருந்தக நிறுவனங்கள், எலான் மஸ்க் தலைக்கு $78 மில்லியன் விலை வைத்துள்ளதாக கூறி, பயனர்களை Gluco Revive உள்ளிட்ட அதிகாரப்பூர்வமற்ற மருந்துகளை வாங்க தூண்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது.
News March 7, 2025
ரோஹித் கொடுக்கப்போகும் பயங்கர அதிர்ச்சி

சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலுடன் சர்வதேச ODI போட்டிகளில் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி20 உலகக்கோப்பையில் நடந்தது போலவே, CT கோப்பை வென்று கொடுத்த பின் அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அடுத்த ஒரு ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டு, சர்வதேச போட்டிகளுக்கு Good Bye சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News March 7, 2025
நாளை கெடு.. மணிப்பூரில் அமைதி திரும்புமா?

மணிப்பூரில் நாளை முதல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மலைப் பகுதி மக்களுக்கு தனி நிர்வாகம் அல்லது யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என பழங்குடி அமைப்புகள் போர் கொடி தூக்கியுள்ளன. இதற்கு மெய்தி அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மலைப்பகுதியை நோக்கிய பேரணியை அறிவித்துள்ளதால், பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.