News March 6, 2025
மும்பை மகளிர் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரில், மும்பைக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது உ.பி., அணி. லக்னோவில் டாஸ் வென்ற MIW அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய UPWW வீராங்கனைகள், முதலில் அதிரடியாக ஆடினாலும், பிறகு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 150/9 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜியா 55 ரன்கள் எடுத்தார். MIW தரப்பில், அமெலியா 5 விக்கெட் வீழ்த்தினார்.
Similar News
News March 7, 2025
ஜாக் மா பொன்மொழிகள்

*ஒரு தலைவருக்கு அதிக சகிப்புத்தன்மையும், தோல்வியை ஒப்புக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் திறனும் இருக்க வேண்டும். *நான் மற்றவர்களால் விரும்பப்படுபவராக இருக்க விரும்பவில்லை, நான் மற்றவர்களால் மதிக்கப்படுபவராக இருக்க விரும்புகிறேன். *இந்த உலகில் மிகவும் நம்பமுடியாத விஷயம் மனித உறவுகள். *நீங்கள் சொல்வதை இந்த உலகம் நினைவில் கொள்ளாது, ஆனால் நீங்கள் செய்ததை அது நிச்சயமாக மறக்காது.
News March 7, 2025
CT FINAL: நடுவர்கள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, AUSஐ சேர்ந்த பால் ரெஃபில் மற்றும் ENGஐ சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாக இருப்பர். இலங்கைச் சேர்ந்த ரஞ்சன் மதுகல்லே போட்டி நடுவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3rd Umpire ஆக ஜோயல் வில்சனும், 4th Umpire ஆக குமார் தர்மசேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News March 7, 2025
தீவிரவாதியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் சிக்கல்?

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ராணா, USA சுப்ரீம் கோர்ட்டில், அவசர மேல்முறையீடு செய்துள்ளான். தான் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால், முன்னாள் ராணுவ அதிகாரி என்ற காரணத்தால், அதீத சித்ரவதை, மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், எனவே நாடு கடத்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளான். கோர்ட் இந்த மனுவை பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை தேதியை இன்னும் ஒதுக்கவில்லை.