News March 6, 2025
சர்வதேச செஸ் போட்டியில் அசத்தும் தமிழர்கள்

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர். 6வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா அமெரிக்க வீரரையும், அரவிந்த் வியட்நாம் வீரரையும் வீழ்த்தியுள்ளனர்.
Similar News
News March 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 199 ▶குறள்: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். ▶பொருள்: அரும்பயன்களை ஆராய்ந்து மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
News March 7, 2025
போலீஸ் கஸ்டடியில் நடிகை

தங்கம் கடத்திய கன்னட நடிகை ரன்யா ராவ் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. துபாயில் இருந்து ₹12 கோடி மதிப்பிலான 14.8 கி.கி தங்கம் கடத்தி வந்த போது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த ஆண்டு மட்டும் அவர் 27 முறை துபாய் சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
News March 7, 2025
ஷமி பாவம் செய்துவிட்டார்: முஸ்லிம் மதகுரு

புனித ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடிக்காமல் ஷமி பாவம் செய்துவிட்டதாக முஸ்லிம் மதகுரு மௌலானா சஹாபுதீன் ரஷ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். IND vs AUS போட்டியின் போது ஷமி கூல்டிரிங் குடித்தது சர்ச்சையான நிலையில், அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், பயணத்தில் இருக்கும் போது நோன்பை கடைபிடிப்பதில் குரானில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பல முஸ்லிம் தலைவர்கள் ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.