News March 6, 2025
சென்னை கோட்டத்தில் 2024 இல் ரயில் மோதி 696 பேர் பலி

சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த 2024ஆம் ஆண்டில் ரயில்கள் மோதி 696 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ”2024இல் மட்டும் ரயில்கள் மோதியும், ரயில்களில் இருந்து தவறி விழுந்தும் 1,196 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார். இதில் அதிகபட்சமாக சென்னை கடற்கரை- விழுப்புரம் தடத்தில் 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 6, 2025
இது தலைகுனிவு இல்லையா முதல்வரே? அண்ணாமலை

அரசு நிறுவனத்தில் இன்று ED ரெய்டு நடைபெற்று வருகிறது. 2016இல் தலைமைச் செயலகத்தில் ED நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன முதல்வர் அவர்களே என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு தான் இந்த ரெய்டு. வழக்கம்போல் இந்த செய்தியையும் திசை திருப்ப முடியுமா என்று பாருங்கள் என சாடியுள்ளார்.
News March 6, 2025
BREAKING: 14 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படை 14 தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. மன்னார் தெற்கு கடற்பரப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்களின் கைதை தடுக்க கோரிக்கை விடுத்தாலும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
News March 6, 2025
காதலை நிரூபிக்க இப்படியா… சிக்கிய இளசுகள்!

காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் காதலியின் சகோதரர் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் காதலை நிரூபிக்க இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். நீங்க காதலுக்காக செஞ்சது என்னன்னு கமெண்ட் பண்ணுங்க!