News March 6, 2025
தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

தூத்துக்குடி மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக மாவட்ட பதிவாளர்(தணிக்கை) சதாசிவம் உட்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News March 7, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
News March 7, 2025
பரபரப்பான சூழ்நிலையில் காவல்துறை செய்தி வெளியீடு

எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது, கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. முனீஸ்வரன் என்பவர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து 5¾ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 யும், மகேஷ் கண்ணனிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ரூ.15,000 மீட்கப்பட்டுள்ளது.
News March 6, 2025
தூத்துக்குடி மக்களே பறவை கணக்கெடுப்பில் பங்கு பெறுங்கள்

வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும், அதன்பிறகு வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும் நடக்கிறது. தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வனச்சரக அலுவலரை 9597477906 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.