News March 6, 2025
தூத்துக்குடியில் 392 பேர் +1 தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் நேற்று(மார்ச் 5) +1 பொதுத் தேர்வு துவங்கி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 19,766 இத்தேர்வு எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த தமிழ் தேர்வில் மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 384 மாணவர்களே தேர்வு எழுதினர். 392 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
Similar News
News March 7, 2025
பரபரப்பான சூழ்நிலையில் காவல்துறை செய்தி வெளியீடு

எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது, கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. முனீஸ்வரன் என்பவர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து 5¾ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 யும், மகேஷ் கண்ணனிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ரூ.15,000 மீட்கப்பட்டுள்ளது.
News March 6, 2025
தூத்துக்குடி மக்களே பறவை கணக்கெடுப்பில் பங்கு பெறுங்கள்

வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும், அதன்பிறகு வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும் நடக்கிறது. தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வனச்சரக அலுவலரை 9597477906 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
News March 6, 2025
திருச்செந்தூர் இலை விபூதி பற்றி தெரியுமா?

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படுவது பன்னீர் இலை விபூதியாகும். சூரசம்ஹாரம் முடிந்த பின் தேவர்கள் பன்னீர் மரங்களாக மாறினர். முருகப்பெருமானுக்கு 12 கை உள்ளது போல பன்னீர் இலைகளுக்கு 12 நரம்புகள் உள்ளன. திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியை அருந்தி ஆதிசங்கரர் காச நோயை குணமாக்கினார் என கூறப்படுகிறது. திருச்செந்தூர் இலை விபூதி வலிப்பு, குஷ்டம், குடல் புண் நோய்களை தீர்க்கவல்லது. ஷேர்