News March 6, 2025

மனைவியை கொலை செய்த கணவர் கைது

image

வெம்பக்கோட்டை, தாயில்பட்டியில் மனைவி முனீஸ்வரியை எரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் பொன்னுசாமி நேற்று தப்பி சென்றார். பின்னர் பொன்னுசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொலை முயற்சியின் போது 40% தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த போலீசார் அவரை கைது செய்து காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

விருதுநகர்: ஆசையாக வளர்த்த ஆடு பலி – மாணவர் தற்கொலை

image

விருதுநகர், நரிக்குடியை சேர்ந்தவர் பாண்டி மகன் செந்தில்குமார். அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வந்தார். இவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை சேமித்து ஆசையாக செம்மறி கிடாய் குட்டி வாங்கினார். சமீபத்தில் பெய்த கனமழைக்கு அக் குட்டி நோய் வாய்ப்பட்டு இறந்தது. இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார் டிச., 1 ல் விஷம் குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார்.

News December 4, 2025

காரியாபட்டி அருகே நாகாத்தம்மன் கோயில் திருவிழா

image

காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மன் புத்துக்கோயில் 7-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் விழாவில் பக்தர்கள் அழகு குத்தி, காவடி எடுத்து, முளைப்பாரி வளர்த்து தன்னுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News December 4, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04562 -252723 அணுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!