News March 6, 2025
தர்மபுரி: நாய் கடிக்கு சிகிச்சை பெறாத முதியவர் சாவு

தர்மபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை கல்யாண மண்டபம் எதிரே வசித்து வந்தவர் ராஜேந்திரன் (68).இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு, ராஜேந்திரனை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. அதற்கு அவர் ஊசி போடாமலும், முறையாக சிகிச்சை பெறாமலும் அலட்சியமாக இருந்து விட்டார். இதனால், ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் நோய்த்தொற்றின் வீரியத்தால் உயிரிழந்தார்.
Similar News
News September 22, 2025
தர்மபுரியில் நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டனூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை அம்ரிஷ் உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
News September 22, 2025
தர்மபுரி: தொடங்கியது நவராத்திரி! எங்கெல்லாம் வழிபடலாம்…

நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. இந்த நாட்களில், அன்னை பராசக்தியின் பல்வேறு வடிவங்களை வழிபடுகின்றனர். பல வீடுகளில் ஒன்பது நாட்களும் கொலு வைத்து, மூன்று தேவிகளையும் வழிபடுகின்றனர். தைரியம், சக்தி பெற துர்க்கை வழிபாடும், செல்வம், வளம் பெற மகாலட்சுமி வழிபாடும், கல்வி, ஞானம், கலை பெற சரஸ்வதி வழிபாடும் செய்யப்படும். <<17789218>>தர்மபுரியில் உள்ள அம்மன் கோயில்களுக்கு<<>> சென்று வழிபடலாம்.ஷேர்
News September 22, 2025
தருமபுரியில் நவராத்திரிக்கு செல்ல வேண்டிய கோயில்கள்

தருமபுரியில் நவராத்திரிக்கு செல்ல வேண்டிய சில முக்கிய கோயில்கள்:
* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனர் கோவில்
* தர்மபுரி கௌரி மாரியம்மன் கோவில்
* கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில்
* அக்கரைப்பட்டாளி அம்மன் கோவில்
* இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோவில்
* குந்தி அம்மன் கோவில்
* அங்காளம்மன் கோயில்கள் (SHARE IT)