News March 6, 2025

பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தலைவாசல் தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி பானுமதி இவர்களது மகள் தரணி ஸ்ரீ வயது (15 ) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளியில் சக தோழிகள் ஐந்து பேர் கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News November 16, 2025

வாழப்பாடி: 100 ஆண்டு ரகசியத்தை உடைத்த மாணவன்!

image

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடலூர் சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட 100 ஆண்டு பழமையான ‘மைல்கல்’ உள்ளது. இக்கல்லில் ‘செக்சன் லிமிட்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கீழே சில குறியீடுகளும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டை, வாழப்பாடியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சிபிஅரசு ‘படி’ எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். இந்த மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News November 16, 2025

வீராணம் விவசாயியிடம் வழிபறி; எட்டு பேர் அதிரடி கைது!

image

வீராணம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பூவனூர் அருகே நேற்று மாலை மணிகண்டன் என்பவர் தனது தோட்டத்தில் பால் எடுத்துக்கொண்டு வரும்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கி விட்டு அவருடைய செல்போன் பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசர் சரவணன்(28), சீனிவாசன், மாதங்கிதாசன்(26), மணிகண்டன்(24), ராம் குமார் (27) சுராஜ் பர்வேஸ் (19), கார்கில் (23) , விஷ்வா(20) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

News November 15, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!