News March 5, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ‘ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் நாளை (6.3.2025) காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

Similar News

News November 13, 2025

உதகை ஏடிசி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

image

உதகை ஏடிசி நடைபாதை பகுதியில் உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி தொடங்கியது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

News November 13, 2025

நீலகிரியில் சிக்கித் தவிக்கும் சிறுத்தை!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட வேலி கம்பியில் இன்று ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில், சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை பாதுகாப்பாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 13, 2025

கோத்தகிரி அருகே பரபரப்பு: அழுகிய நிலையில் புலி சடலம்!

image

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள கடசோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு, சில மீட்டர்கள் தொலைவில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில், புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள், புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!