News March 5, 2025

நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில் நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பை உட்கோட்ட பகுதிகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 7, 2025

நெல்லை: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

image

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News November 7, 2025

நெல்லை: வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருக்குறுங்குடி சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (30), வெளிநாட்டில் கட்டடத் தொழிலாளியாக இருந்து விடுமுறைக்கு வந்தவர். இவர் மது அருந்திவிட்டு மனைவி லட்சுமியுடன் சண்டையிட்டதால், அவர் குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்குச் சென்றார். இதனால் மனமுடைந்த செல்வக்குமார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் விசாரணை.

News November 7, 2025

சவுதியில் சேவையாற்ற வாய்ப்பு – நெல்லை ஆட்சியர்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில்; 2026 ஆம் ஆண்டு புனித ஹச் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹச் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹச் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப விண்ணப்பிக்கலாம். தற்காலிக பணி காலம் சுமார் 2 மாதம் மத்திய மாநில அரசு ஊழியர்கள் துணை ராணுவ படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

error: Content is protected !!