News March 5, 2025
+1 தேர்வில் 11,070 பேர் ஆப்சென்ட்

+1 பொதுத் தேர்வில் இன்று 11,070 பேர் தேர்வெழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தமிழகம் முழுவதும் +1 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மாணவ, மாணவியர் சிரமமின்றி தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 8,23,261 பேர் தேர்வெழுதவிருந்தனர். இந்நிலையில் மொழிப் பாடத் தேர்வு எழுதாமல் மொத்தமாக 11,070 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
திமுகவா? தவெகவா? குழப்பத்தில் காங்கிரஸ்!

TN-ல் பல ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு இல்லாமல் இருக்கும் காங்., 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு பெறுவதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., மூத்த தலைவர்கள் வெற்றியை உறுதி செய்ய திமுக கூட்டணியே சிறந்தது என்கின்றனர்; ஆனால், இளம் தலைவர்களோ தவெகவிடம் 75 இடங்கள் வரை பெறுவதோடு, ஆட்சியில் பங்குபெறலாம் என கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், காங்.,-ல் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 14, 2026
மகளிருக்கு ₹5,000 மானியம்.. அரசு அறிவிப்பு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் தொழில் தொடங்க அரசு மானியம் அறிவித்துள்ளது. இதற்கு, பிறப்புச் சான்று, BLP கார்டு(வறுமைக் கோட்டு அட்டை), வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களுடன், தகுதியுடைய பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ₹10,000-க்கு மேல் உள்ள கிரைண்டர் வாங்க 50% அல்லது ₹5,000 மானியமாக வழங்கப்படுகிறது.
News January 14, 2026
வாத்தியாரிடம் ஆசிர்வாதம் பெற்ற வாத்தியார் (PHOTOS)

நீண்ட தள்ளிவைப்பிற்கு பின், அடுத்தடுத்து உண்டான சிக்கல்களை சமாளித்து கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தில் எம்ஜிஆரின் மறு உருவமாக நடித்துள்ள கார்த்தி, சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதியில் மலர்தூவி ஆசிர்வாதம் பெற்றார். அப்போது, அவருடன் நடிகர்கள் சத்யராஜ், ஆனந்தராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் உடனிருந்தனர். எத்தனை பேர் ‘வா வாத்தியார்’ பார்க்க வெயிட்டிங்?


