News March 5, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு வரும் மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களில் மொத்தமாக 1691 தேர்வாளர்கள் கணினி வழியில் தேர்வு எழுத உள்ளனர். இதில் 69 மாற்றுத்திறனாளிகளும், 25 மாற்றுத்திறனாளிகள் சொல்லி எழுதுபவர்களும் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
மது விற்றால் கடும் நடவடிக்கை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், கிளப், பார் உட்பட அனைத்து இடங்களில் நாளை மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும், தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி திருக்கோவிலூர் பகுதியில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி பார்த்திபன் எச்சரிக்கை.
News August 14, 2025
மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (14.08.2025) இரவு 10 மணி முதல், நாளை வெள்ளி கிழமை (15.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 14, 2025
சுதந்திர தின விழாவுக்கு அழைப்பு

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அழைப்பு விடுத்துள்ளார்